Friday, April 23, 2010

இன்றைய தமிழகம்ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்ஒருவர் கேட்டார்_எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?நான் கேட்டேன்_ கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?அவர் சிரித்தபடி சொன்னார்_ என்னைப் பார்,1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிவிடுவேன்,போரடித்தால் வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!நான் கேட்டேன்_ உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?முதலாமவர் சிரித்தபடி கேட்டார்_ நான் யார் தெரியுமா?தமிழ்நாட்டுக் குடிமகன்என் மாநிலத்தில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்,பொழுதுபோக்கிற்கு வண்ணத்தொலைக்காடிப்பெட்டி, மின்சாரத்துடன் இலவசம்,குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,எதற்காக உழைக்க வேண்டும்?நான் கேட்டேன்_ உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?பலமாக சிரித்தபடி உரைத்தார்,மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000 இலவசம்,1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்.நான் எதற்கு உழைக்க வேண்டும்...?வியந்து போனேன் நான்!!!என் உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!!இதில் நீ எந்த‌ வ‌கை? எதை எடுத்துக்கொள்வ‌து?உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய்_ இலவசம் நின்றுபோனால் உன் நிலை??உழைப்ப‌வ‌ர் சேமிப்பைக் க‌ள‌வாட‌த் த‌லைப்ப‌டுவாய்!!!இதே நிலை தொட‌ர்ந்தால்....இல‌வ‌ச‌ம் வ‌ள‌ர்ந்தால்...அமைதிப் பூங்காவாம் த‌மிழ‌க‌ம், க‌ள்வ‌ர் பூமியாய் மாறும் நிலை இன்னும் வெகு தொலைவில் இல்லை.த‌மிழா விழித்திடு....உழைத்திடுஇலவசத்தை வெறுத்திடு, அழித்திடுதமிழகத்தை தரணியில் உயர்த்திடு!!!

3 comments: